திருவாரூர், மே 5: திருவாரூர் மாவட்டம் நீலக்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது, திருவாரூர் அருகே நீலக்குடி110 கி.வோ மற்றும் 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் பராமரிப்பு பணி காரணமாக அங்கிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் நன்னிலம் துணை மின் நிலையம் மற்றும் நீலக்குடி துணை மின் நிலையங்கள் தொடர்புடைய வைப்பூர், நடப்பூர், வாழ்குடி, கீழ தஞ்சாவூர், பில்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரைமங்கலம், காரையூர், திருப்பள்ளிமுக்கூடல், ராதாந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, சேந்தமங்கலம் பெரும்புகளூர், திருப்பயத்தாங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (6ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post நாளை மின்தடை appeared first on Dinakaran.